ARTICLE AD BOX
Published : 20 Feb 2025 12:37 AM
Last Updated : 20 Feb 2025 12:37 AM
தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், கோடை காலத்தை போன்று தமிழகத்தில் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்டால் அதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வரும் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலைவழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.20) முதல் 25-ம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று ஓரிரு இடங்களில்அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 21, 22, 23 தேதிகளில்ஒருசில இடங்களில் வழக்கத்தைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையாக கரூர் பரமத்தியில் 35.5 டிகிரி, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம் ஆகியஇடங்களில் தலா 35 டிகிரி, ஈரோட்டில் 34.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 17 டிகிரி, சேலத்தில் 17.8 டிகிரி, திருப்பத்தூரில் 18 டிகிரி, திருத்தணி, வேலூரில் ஆகிய இடங்களில் தலா 19 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. மலைப் பிரதேசங்களான கொடைக்கானலில் 8 டிகிரி, வால்பாறையில் 10 டிகிரி, உதகையில் 11.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்
படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ஃபைபர் நெட் திட்டத்தில் கிராமங்களை இணைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- உயர் நீதிமன்றத்தில் டச் ஸ்கிரீன் வசதியுடன் டிஜிட்டல் ‘வாய்ஸ் - ரெககனேஷன்’ தொழில்நுட்பம்: வழக்கறிஞர்கள் வரவேற்பு
- திருப்பூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: ஒடிசா பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - என்ன நடந்தது?
- மனைவியின் நடத்தையில் சந்தேகம்: இரு குழந்தைகளை கொன்ற தந்தை - சேலம் கெங்கவல்லியில் நடந்தது என்ன?