இறக்குமதி வரி குறைப்புக்குப் பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை என்ன?

6 hours ago
ARTICLE AD BOX

Published : 24 Feb 2025 05:13 AM
Last Updated : 24 Feb 2025 05:13 AM

இறக்குமதி வரி குறைப்புக்குப் பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை என்ன?

<?php // } ?>

புதுடெல்லி: இறக்குமதி வரி குறைப்புக்குப்பின் இந்தியாவில் டெஸ்லா காரின் விலை ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டெஸ்லா கார், இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும், பெரும்பாலான மக்களை சென்றடைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறினார். இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்கமுடியவில்லை என அவர் தெரிவித்தார். டெஸ்லா கார் நிறுவனர் எலான் மஸ்க்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசி இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இறக்குமதி வரியையும் 20 சதவீதத்துக்கு கீழ் இந்தியா குறைக்கும் எனத் தெரிகிறது. .

இதன் காரணமாக இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்யும் பணியையும் டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் குறைந்த விலைக்கு டெஸ்லா காரை விற்க வேண்டுமானால், இங்கு அந்த நிறுவனம் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்.

அமெரிக்காவில் டெஸ்லா காரின் குறைந்த விலை மாடல் 35,000 டாலருக்கு விற்கப்படுகிறது. இதன் இந்திய விலை சுமார் ரூ.30.4 லட்சம். இதற்கு இந்தியா 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை வரி, காப்பீடு ஆகியவற்றை சேர்த்தால் டெஸ்லா காரின் விலை இந்தியாவில் தோரயமாக ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சமாக இருக்கும்.

இதனால் இந்த கார் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வாங்கும் விலையில் இருக்காது என கூறப்படுகிறது. மேலும், டெஸ்லா கார் வரவால், இந்திய கார் சந்தையில் போட்டி நிலவுவதற்கான வாய்ப்பு இல்லை. இந்த விலையை விட குறைவான விலையில் மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகின்றன. அதனால் இந்தியாவின் எலக்ட்ரிக் கார் சந்தையில், டெஸ்லா காரின் வரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article