ARTICLE AD BOX
ஹோலி கொண்டாட்டத்தின்போது ‘ரசாயன கலர் பொடி’ பூசிய கும்பல்.. 4 மாணவிகள் உடல்நிலை மோசம்!
பெங்களூர்: கர்நாடகாவில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது மர்ம கும்பல் ரசாயனம் கலந்த கலர் பொடியை பூசினர். இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாணவிகள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்டிகையின்போது, பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அவர்கள் 8 ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த மாணவர்கள் கும்பல் அந்த மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர்.

அந்த நேரத்தில் பேருந்து வந்ததால் அந்த மாணவிகள் அதில் ஏறினர். அவர்களை துரத்திச் சென்ற அந்த கும்பல், பேருந்தில் ஏறி அந்த மாணவிகள் மீது வண்ணப் பொடிகளைப் பூசியுள்ளது. அதில், பல்வேறு ரசாயனம் கலந்திருந்துள்ளது. இதனால் 7 பேருக்கும் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பாதிக்கப்பட்ட மாணவிகளை மீட்டு கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 7 மாணவிகளில் 4 மாணவிகளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் மே சிகிச்சைக்காக GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து, ரசாயன பொடிகளை தூவிவிட்டு தப்பிய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ஹோலி பண்டிகை கொண்டாடப் பயன்படுத்தும் வண்ணப் பொடிகள் சிலவற்றில் ரசாயனம் கலந்திருக்கும். இதை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், ரசாயன வண்ண பொடிகள் பயன்படுத்துவது, சருமத்தை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய பொடிகளை பயன்படுத்துவதையும் விற்பதையும் தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- திருச்செல்வம் என்கிட்ட நேரடியா அப்படி கேட்டாரு! இதை எதிர்பார்க்கல! சிறகடிக்க ஆசை மீனா மகிழ்ச்சி
- கோவையில் ஹோம் லோன் போட்டு, புதிதாக வீடு கட்டியவருக்கு 4 வருடம் கழித்து ட்விஸ்ட்.. கோர்ட் குட் நியூஸ்
- Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- தமிழக பட்ஜெட் ரூபாய் லோகோ மாற்றத்தால்.. புலம்பி தீர்க்கும் வட இந்திய நெட்டிசன்கள்!
- '₹' பதில் 'ரூ'.. குறியீட்டு வாதம் மட்டுமல்ல, இந்திய ஒற்றுமையை பலவீனப்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்
- தேனியில் வைகை ஆற்றுப்பாலத்தில் பைக்கை நிறுத்திய கள்ளக்காதல் ஜோடி.. இதுல ஹேப்பி டூர்.. இரவில் கொடுமை
- ரூபிணிக்கு இந்த நிலைமையா? வேலூர் பிரமுகர் யார்? திருப்பதி கோயிலில் ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஆசைப்பட்டு?
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்.. சீனுக்குள் வரும் சீனா.. அப்பவே சொன்ன மோடி! பலுசிஸ்தானில் நடப்பது என்ன?