ARTICLE AD BOX
2,925 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள்.. வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: காவேரி, கல்லணை கால்வாய் பாசனப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூ.13.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுக்க, பல கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால், மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல, வறட்சி காலங்களில் கால்வாய் மூலமாக நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
ரூ.68 கோடியில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நீர்வடிப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் உள்ள "சி" மற்றும் "டி" பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் ரூ.13.80 கோடி மதிப்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும். மேலும், ரூ.2.75 கோடியில், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பசுமைத் தமிழ்நாட்டை உருவாக்க "தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கை" உருவாக்கப்படும். டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும்.மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பழைய ஓய்வூதிய திட்டம் எங்கே? பட்ஜெட்டால் கடுகடுப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்து என்ன?
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- பச்சை துண்டு அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.. முதல்வர், துணை முதல்வர் மற்றும் சீனியர்கள் மிஸ்ஸிங்!
- சென்னையன்ஸ்க்கு குட்நியூஸ்..காய்கறிக்கு கோயம்பேடுக்கு அலைய வேண்டாம்! வேளான் பட்ஜெட்டில் செம அறிவிப்பு
- 1 வருடம்தான் தேர்தலுக்கு.. அதிமுக எதிர்பார்க்காத இடத்தில்.. திமுக வைத்த செக்.. பட்ஜெட்டில் 6 சிக்ஸர்
- கோவை, மதுரை, திருச்சி, சென்னை.. தமிழ்நாட்டில் சாலை நெட்வொர்க்கே மாறுது! வரும் புது நெடுஞ்சாலைகள்!
- மகளிர் உரிமைத் தொகை போல்! பெண்களை கைவிடாத தமிழக பட்ஜெட்! மதுரை, கோவை, திருச்சி லேடீஸுக்கு முக்கியம்!
- திண்டுக்கல்லுக்கு லட்டு போல் அறிவிப்பு..தூத்துக்குடி, தஞ்சைக்கும் தான்! தமிழக பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்!
- வேளச்சேரியில் எதற்கு புதிய பாலம்.. கார்களை நிறுத்துவதற்கா? பட்ஜெட்டால் கொந்தளித்த தமிழிசை!
- பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. 20 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி
- வருவாய் பற்றாக்குறை 1.17%ஆக குறையும்! தமிழக அரசின் கடனும் 26%ஆக குறையும்! தங்கம் தென்னரசு அறிவிப்பு
- ஏப்ரல் 30 வரை தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு! வெளியானது அட்டவணை!
- தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1.92 லட்சம் கோடி.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு
- திசையன்விளை, மணப்பாறை உள்ளிட்ட 10 சிறு நகரங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள்- அசத்தல் பட்ஜெட்
- பட்ஜெட்டில் கோவைக்கு அறிவிக்கப்பட்ட முத்தான 8 திட்டங்கள்.. முழு விவரம் இதோ