வேளாண் பட்ஜெட்: இபிஎஸ் கருத்து

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: அதிமுக பொதுச் செயலார் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் நெல், கரும்பு உற்பத்தி குறைந்துவிட்டது. சாகுபடி பரப்பை 75 சதவீதமாக உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை 37.7 சதவீதமாகவே உள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்று ஒரு திட்டத்தை திமுக கொண்டு வரவில்லை. அத்திக்கடவு அவினாசியில் 2வது திட்டத்தை அதிமுக கொண்டு வந்தது. அதனையும் இந்த அரசு கைவிட்டுள்ளது. கடன் பெற்றுதான் திட்டங்களை நிறைவேற்றும் நிலை உள்ளது. நிதி மேலாண்மையை சரி செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழு என்ன செய்துள்ளது. நிதி மேலாண்மை நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நிறைய கடன் வாங்கி உள்ளது. மழைநீரை சேமிக்கும் குடிமராமத்து திட்டம் கைவிடப்பட்டுள்ளது. வேளாண் துறை சார்ந்த பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் போல ஒரு பட்ஜெட்டை அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் இதில் பல உள்ளன.

The post வேளாண் பட்ஜெட்: இபிஎஸ் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article