“வேலியே பயிரை மேய்வது போல”.. சிறுமிகள் முதல் மூதாட்டி வரை… எடப்பாடி பழனிச்சாமி வேதனை…!!!

3 hours ago
ARTICLE AD BOX

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றோம். அதிமுகவின் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக தான் இருந்தது. ஆனால் இன்று தினமும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனையாக உள்ளது. தவறு செய்பவர்கள் மீது அதிமுக ஆட்சியில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆனால் தமிழகத்தில் இன்று திமுக ஆட்சியில் பெண் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். வேலியே பயிரை மேய்வது போல ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்து கொண்டிருக்கின்றனர். திமுகவின் ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறார்கள். குழந்தைகளின் பாதுகாப்பை இந்த அரசு தான் உறுதி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்கள் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக திகழ்ந்தது. ஆனால் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வேதனை தெரிவித்துள்ளார்.

Read Entire Article