ARTICLE AD BOX
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.24ம்தேதி மனித கழிவு கலந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஜனவரி 20ம்தேதி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இது புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் மார்ச் 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் சார்பில் நேற்று (19ம்தேதி) சம்மன் அனுப்பப்பட்டது.
The post வேங்கைவயல் விவகாரம்; போலீஸ்காரர் உள்பட 3 பேருக்கு கோர்ட் சம்மன் appeared first on Dinakaran.