ARTICLE AD BOX
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19ம்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 68 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22ம்தேதி சிபிஐ அதிகாரிகள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள்ளக்குறிச்சிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி கடந்த மாதம் 29ம்தேதி சிபிஐ அதிகாரிகள் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.
The post விஷ சாராய வழக்கு செங்கல்பட்டுக்கு மாற்றம் appeared first on Dinakaran.