ARTICLE AD BOX

தமிழகத்தில் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டு இருந்தது. இது பற்றி அறிக்கை வெளியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் டாஸ்மாக் ஊழலை பற்றி அமலாக்கத்துறை பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளை பார்க்கும்போது திமுக அரசை பற்றி அதில் ஒரு இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்ததார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, விஜய் சொன்னது சரிதான். திமுகவின் ஊழல் பற்றி புத்தகம் எழுதுவது என்ன திரைப்படம் கூட எடுக்கலாம். தமிழக பட்ஜெட்டில் இருப்பதை இருக்கிறது என்று சொல்கிறோம். மற்றபடி ரூ போட்ட பட்ஜெட்டை பற்றி ஓ போட முடியாதபடி இருக்கிறது என்று கூறினார்.