இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்ட பிறகு, பங்குச் சந்தைகள் ஏற்றத்தை மறந்து விட்டு தொடர்ந்து வீழ்ச்சி பாதையில் பயணித்து வருகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்சத்திலிருந்து தற்போது 14.15 சதவீதம் குறைவாக உள்ளது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி அதன் உச்சத்திலிருந்து தற்போது 14.75 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக சந்தையின் நிலவரம் 'sell on rise' என்ற நிலையில் உள்ளது. அதாவது பங்கின் விலை உயரும் போது விற்பனை செய்வது என்பதாகும்.

பங்குச் சந்தை நிலவரம் குறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியால் ஏற்பட்ட பலவீனமான உலகளாவிய சந்தை போக்குகள் இருந்தபோதிலும், இந்திய பங்குச் சந்தை மீள்தன்மையை காட்டியுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தரமான பங்குகள் இப்போது தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு தங்களது பங்கு போர்ட்ஃபோலியோவை சீரமைக்க ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர்கள் நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டு எல்லைகளுக்கு ஆதரவான மதிப்பீடுகளுடன் தரமான வணிகங்களில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.
எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸின் சீமா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், முதலீட்டாளர்கள் எப்போதும் நியாயமான மதிப்பில் அல்லது அதற்கு அருகில் கிடைக்கும் பங்குகளை வாங்க வேண்டும். சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், சஃபையர் ஃபுட்ஸ் இந்தியா லிமிடெட், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் லிமிடெட், ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல், பேங்க் ஆஃப் பரோடா,யுபிஎல் லிமிடெட், எஸ்ஜேவிஎன் லிமிடெட், ஆக்சிஸ் பேங்க் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் போன்ற அடிப்படையில் வலுவான நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்திய கடும் விற்பனைக்கு பிறகு, கேஇசி இன்டர்நேஷனல் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் முதலீட்டுக்கு நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
கடந்த வர்த்தக தினத்தில் மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,247.80ஆக இருந்தது. அதன் உச்சவிலையை காட்டிலும் தற்போது இப்பங்கின் விலை சுமார் 22 சதவீதம் குறைவாக உள்ளது.கடந்த வர்த்தக தினத்தில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கேஇசி இன்டர்நேஷனல் பங்கின் விலை ரூ.672.40ஆக இருந்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 49 சதவீதம் குறைவாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.