ARTICLE AD BOX
வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை! மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: தேர்தல்களில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க வழங்கப்பட்ட USAID நிதி, ஆட்சி மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில், இந்த நிதி வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க USAID பயன்படுத்தப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதி, முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்றும், குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனை காங்கிரஸ் மறுத்திருக்கிறது. மறுபுறும் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் நிதியை பாஜக எப்படி கையாள்கிறது? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்த நிதியை கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் விவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தற்போது அமெரிக்கா USAID நிதியாக ஏறத்தாழ $750 மில்லியன் வழங்கியிருப்பதாகவும், இதில் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் வாக்காளர், தேர்தல் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2023-24 ஆம் ஆண்டில் மொத்தம் 825 கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்க கடன் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதியை கொண்டு தேர்தலில் வாக்காளர்களின் பங்களிப்பை அதிகரிக்க எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
அதற்கு பதில் விவசாயம் உணவு பாதுகாப்பு நீர் மேலாண்மை சுகாதாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர காடுகள் மற்றும் காலநிலை தகவல் திட்டத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அரச கூறியுள்ளது.
அமெரிக்கா இவ்வாறு உதவி செய்வது கடந்த 1951 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது வளர்ந்து வரும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா நிதி உதவி செய்து வருகிறது. குறிப்பாக ஆப்பிரிக்கா நாடுகளில் சுகாதாரத்திற்கும் மருத்துவ மேம்பாட்டிற்கும் இந்த நிதி அதிக அளவில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் இந்த நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. காங்கிரஸ் களத்தில் ஒதுக்கப்பட்ட நீதி பாஜகவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்பொழுது பல வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து இந்தியாவுக்கு எதிரான ஊழல் பிரச்சனைகளை எழுப்புமாறு அவர் வலியுறுத்தியதாக பாஜக குற்றம் சாட்டியிருக்கிறது. இதற்காகவே அமெரிக்கா உருக்கிய நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறது. பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கடுமையாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
- அமெரிக்க ராணுவத்தில் இருந்த கறுப்பின அதிகாரி அதிரடி நீக்கம்! வேலையை காட்ட தொடங்கிய டிரம்ப்!
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
- சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஏடிஎம்மில் பணம் எடுக்க போன கோவை பெண்.. பான் கார்டில் பல கோடி... நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
- மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்குமே! அது ஏன் தெரியுமா? XRx என்றால் என்ன?
- இந்தி எதிர்ப்பா? கருணாநிதி எதிர்த்தார்..1991 திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டோம்! எச்சரித்த சு.சுவாமி
- சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை
- மனைவி பெயரில் 25 சொத்துக்கள்.. சொகுசு கார்.. நீதிபதிக்கு கட்டாய ஓய்வை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்