ARTICLE AD BOX
Published : 17 Mar 2025 07:55 AM
Last Updated : 17 Mar 2025 07:55 AM
லியோ-தி அன்டோல்ட் ஸ்டோரி புத்தகம் வெளியீடு!

சென்னை: சிஎஸ்கே அணியின் உருவாக்கம், சவால்கள், சாதனைகள் மற்றும் சோதனைகளை கடந்து மீண்டு வந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘லியோ-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சிஎஸ்கே’ என்ற புத்தகத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான பி.எஸ்.ராமன் எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் முன்னுரை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. புத்தகத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சி.டி.கோபிநாத் வெளியிட முதல் பிரதியை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.
விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிரிஷ் ஸ்ரீகாந்த், சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்.எஸ்.தோனி, பயிற்சியாளர்கள் ஸ்டீபன் பிளெமிங், மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- பாகிஸ்தானை சுருட்டி வீசியது நியூஸி.
- ‘சென்னையில் 3 இடங்களில் நாசவேலை’ - இமெயிலில் மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது
- உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருளாக விற்பனை: மும்பையை சேர்ந்த இருவர் சென்னையில் கைது
- ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் சென்னை ஐசிஎஃப் ஆலையில் மேம்படுத்தப்படும் - ரயில்வே துறை அமைச்சர் தகவல்