ARTICLE AD BOX
ரயில்வே பயணிகள் போர்வை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் அச்சிட தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழிலிலும் அச்சிடப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணிகள் வசதிக்காக இரு வெள்ளை போர்வைகள் வழங்கப்படும் பழுப்புநிற காகித உறைகளில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டுவந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.