ARTICLE AD BOX
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினமும் பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம், மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 390 காசாக நிர்ணயம் செய்தார். தொடர்ந்து நேற்று மீண்டும் முட்டை விலையில் 10 காசுகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
The post முட்டை விலை 400 காசாக நிர்ணயம் appeared first on Dinakaran.