ARTICLE AD BOX
தற்போது இளம் தலைமுறையினருக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. எனினும், பெரும்பாலானவர்களுக்கு பொதுவான பிரச்சனையாக முடி உதிர்வு மற்றும் அடர்த்தியின்மை இருக்கிறது. முன்னர் இருந்த காலத்தில் முதுமையை குறிக்கும் வகையில் முடி உதிர்வு இருக்கும். ஆனால், இப்போது நிறைய இளைஞர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண் மற்றும் பெண் என பாலின பேதமின்றி நிறைய பேருக்கு முடி உதிர்வு இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், பணிச்சூழல், மாசுபாடு மற்றும் மன அழுத்தம் என்று பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதன் விளைவாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நிறைய சிகிச்சை முறைகள் இன்றைய சூழலில் கிடைக்கிறது. ஆனால், இவை அனைத்தும் நிறைய பணம் செலவு செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதால் அனைத்து தரப்பு மக்களாலும் இதனை செய்ய முடியாது.
இதற்காக கவலைபட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், நம் வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களைக் கொண்டு முடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஹேர்பேக்கை நாமே தயாரித்துக் கொள்ளலாம். இவற்றில் இரசாயனங்கள் சேர்க்க வேண்டிய தேவை இல்லை.
அதன்படி, தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி அத்துடன் சாதம் வடித்த கஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதன் பின்னர், இதில் இருந்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். மறுபுறம், நான்கு டேபிள்ஸ்பூன் பச்சை பாசிபயிறு மற்றும் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து அவற்றை, தேங்காய் பாலுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால் ஹேர்பேக் ரெடியாகி விடும். இதனை முடியின் வேர்ப்பகுதியில் மசாஜ் செய்வதை போல் தடவி விட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை என 2 மாதங்களுக்கு பயன்படுத்தினால் முடி அடர்த்தியாக வளரும்.
நன்றி - Be Happy Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.