மாவோயிஸ்ட்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு

7 hours ago
ARTICLE AD BOX

கோவை: கேரள மாநிலம் எடக்கரா காவல் நிலையத்தில் கடந்த 2021ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் கார்த்திக், ஷர்மிளா, சந்தோஷ்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இவர்கள் 3 பேரையும் கைது செய்ய என்ஐஏ கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கேரளா மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் 3 பேரின் புகைப்படத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் போஸ்டர் ஒட்டி என்ஐஏ விசாரித்து வருகிறது. கோவை ரயில் நிலையத்திலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், மாவோயிஸ்ட்கள் 3 பேர் குறித்தும் தகவல் கொடுத்தால் தலா ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர், முகவரி வெளியிடாமல் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாவோயிஸ்ட்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article