ARTICLE AD BOX
அரக்கோணம்: இந்தியாவில் ஒடிசா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி மத்திய தொழிற்பாதுகாப்பு படை உதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு தக்கோலத்தில் உள்ள ஒன்றிய தொழிற்பாதுகாப்பு படை மையத்தில் உதயதினம் கொண்டாடப்பட உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க வரும் 7ம் தேதி வருவார் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
The post மார்ச் 7ம் தேதி அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை appeared first on Dinakaran.