ARTICLE AD BOX
மாபெரும் இந்தியா கோடீஸ்வரரின் மகள் உகாண்டா சிறையில் அடைப்பு.. உணவு கூட தராமல் சித்திரவதை!
உகாண்டா: இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால் கடந்தாண்டு சுமார் 3 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. செய்யாத குற்றத்திற்காக வசுந்தரா ஓஸ்வாலை கைது செய்த போலீசார், அவரிடம் பணத்தைப் பிடுங்கத் தொடர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். இது தொடர்பாக அவர் கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்தாண்டு உகாண்டாவில் உள்ள வெளிநாட்டுச் சிறையில் சிக்கிக் கொண்டவர் இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பங்கஜ் ஓஸ்வாலின் மகள் வசுந்தரா ஓஸ்வால்..

உகாண்டாவில் சிறை:
இவர் கடந்த ஆண்டு உகாண்டாவில் இருந்தபோது அங்குக் கொலை வழக்கு ஒன்றில் சுமார் 3 வாரங்கள் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. இவர் தனது தந்தையின் முன்னாள் ஊழியரைக் கடத்தி கொலை செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டில் மூன்று வாரங்கள் சிறையில் இருந்தார். இருப்பினும், விசாரணையில் தான் அந்த முன்னாள் ஊழியர் பிறகு தான்சானியாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.
இருப்பினும் இந்த இடைப்பட்ட நாட்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை அவர் சிறையில் இருக்க வேண்டி இருந்தது. அதன் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 26 வயதான ஓஸ்வால் அதிபயங்கர கொலை மற்றும் கடத்தல் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
யார் இவர்
பல பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ள ஓஸ்வால் குரூப் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர்களான பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் மகள் தான் வசுந்தரா ஓஸ்வால். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பின் போதே அவர் $200 மில்லியன் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த வில்லாவில் தான் வசித்து வந்தார்.
படிப்பிற்கு பிறகு அவர் 2020இல், அவர் PRO இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவராக பணியில் இணைந்தார். PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை ஏற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அவர் தற்போது பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக (நிதி) பணியாற்றுகிறார். அவரது தலைமையின் கீழ், PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப் பெரியளவில் வளர்ந்தது. அவர் PRO இண்டஸ்ட்ரீஸ் கடனை வெகுவாக குறைத்தார். மேலும், நிறுவனத்தை வலிமையாக மாற்றினார்.
என்ன நடந்தது
உகாண்டாவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்துப் பேசிய வசுந்தரா ஓஸ்வால், "என்னை முதலில் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்கள் சிறையில் அடைத்தனர்.. அப்போது மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டனர். அவர்கள் என்னைக் குளிக்க அனுமதிக்கில்லை.. எனக்கு உணவு மற்றும் தண்ணீர் கூட தரவில்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தரக் கூட என் பெற்றோர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில், தண்டனை கொடுக்கும் விதமாகக் கழிவறையைப் பயன்படுத்தக் கூட அனுமதிக்கவில்லை.
எனது வீட்டைத் தேடும் போது கூட அவர்களிடம் சேர்ச் வாரண்ட் கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் உகாண்டாவில் இருக்கிறோம்.. நாங்கள் எதையும் செய்யலாம் என அதட்டினர். இன்டர்போலுக்குச் செல்லும்படி வற்புறுத்தினார்கள். நான் யோசித்த போது திடீரென ஒரு ஆண் அதிகாரி என்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக வேனில் வீசினார். நான் வக்கீலை சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை. இப்படியெல்லாம் ரூல்ஸ் பேசினால் காலம் முழுக்க சிறையில் தான் இருக்க வேண்டும் என சொல்லி மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்.
பணம் பறிக்க முயற்சி
கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதியே கொலை செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட நபர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், என்னை அவர்கள் வெளியேறவிடவில்லை. ஏதேதோ சொல்லி சிறையிலேயே வைத்திருக்கப் பார்த்தனர். உயிருடன் இருப்பது தெரிந்த பிறகும் அக்டோபர் 21ம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.
நான் ரிலீஸ் ஆன பிறகும் சுமார் 1.5 மாதங்கள் வரை பாஸ்போர்ட் தரவில்லை. அதன் பிறகே பாஸ்போர்ட் கொடுத்தனர். எங்களிடம் இருந்து முடிந்த வரை பணத்தைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இதுபோல ஏதேதோ சொல்லி வழக்கைத் தாமதப்படுத்தினர்" என்றார்.
- காதலனை தேடும் பெண்.. படத்தில் மறைந்து இருக்கும் நபர் எங்கே? 8 செகண்டில் கண்டுபிடிங்க
- பேரழிவுக்கான அறிகுறி? ஆழ்கடலில் மட்டுமே வாழும் உயிரினம் கரை ஒதுங்கியதால் அச்சம்! என்ன நடக்க போகுதோ
- மொத்த தங்கமும் இங்கதான் இருக்கு! டிரம்ப் முடிவால் அதிரும் அமெரிக்கா.. போர்ட் நாக்ஸில் சீக்ரெட் என்ன?
- ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்ட பிரபல ஆபாச பட நடிகை கர்ப்பம்! அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்
- மனித குலம் அழிந்து போனால்.. பூமியில் எந்த உயிரினம் ஆதிக்கம் செலுத்தும்! நீங்க எதிர்பார்க்காத பதில்
- ஆஹா.. சீனா வேலையை காட்டிடுச்சே? மீண்டும் பரவும் கொரோனா! இந்த தடவை வவ்வாலில் இருந்து.. அதென்ன HKU5?
- சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ்.. ஆபத்தானதா? பரவுமா? அறிகுறிகள் என்ன? அறிய வேண்டிய தகவல்கள்
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவைச் சேர்ந்த அலிசா அப்துல்லா விடுத்த பரபரப்பு சவால்
- இந்திரஜா குழந்தையை பார்க்காத காரணம் இதுதான்! இந்த இடத்தில் இருந்து மாறிட்டாங்க.. போஸ் வெங்கட் ஓபன்
- ஒரே நடிகையை காதலித்த 3 நடிகர்கள்.. அவரை திருமணம் செய்ய போயி.. மச்சக்கார ஹீரோ.. இப்படியுமா கிசுகிசு?
- இந்தியாவிடம் மண்டியிட்ட வங்கதேசம்.. ஷேக் ஹசீனா போட்ட போடால் கதறும் முகமது யூனுஸ்.. என்ன நடந்தது?
- இப்படியா அசிங்கப்படுத்துவீங்க? புகழால் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து கோபமாக வெளியேறிய சௌந்தர்யா
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. வீடுகளில் மின் கட்டணம் மாறுது.. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்