மாநில அரசுகளின் சுயசார்பு தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

1 day ago
ARTICLE AD BOX

Published : 16 Mar 2025 01:40 AM
Last Updated : 16 Mar 2025 01:40 AM

மாநில அரசுகளின் சுயசார்பு தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

<?php // } ?>

சென்னை: அண்​மைக் கால​மாக அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​பு​களில் ஒன்​றான கூட்​டாட்​சித்தத்​து​வம் பாதிக்​கப்​படும் சூழலில் நிதி, கல்வி போன்ற பல விச​யங்​களில் மாநில அரசுகளின் சுய​சார்​புத் தன்மை உறுதி செய்​யப்பட வேண்​டும் என தமிழக முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 75-ம் ஆண்டு ஏற்பு விழா மற்​றும் சென்னை உயர்​நீ​தி​மன்ற மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் 160-வது ஆண்டு விழா நேற்று நடை​பெற்​றது. மெட்​ராஸ் பார் அசோசி​யேஷன் தலை​வர் எம்​.​பாஸ்​கர் வரவேற்​றார். மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா மெட்​ராஸ் பார் அசோசி​யேஷனின் 160 ஆண்டு கால பயணம் குறித்து எடுத்​துரைத்​தார்.

சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் தலைமை வகித்​தார். உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், கே.​வி.​விஸ்​வ​நாதன், ஆர்​.ம​காதேவன் ஆகியோர்முன்​னிலை வகித்து பேசினர். நிறை​வாக விழா மலரை வெளி​யிட்டு முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: இந்​தி​யா​வில் தலைசிறந்த பாரம்​பரி​யம் கொண்​டது சென்னை உயர் நீதி​மன்​றம். சட்​டத்​தின் ஆட்​சியை நிலைநிறுத்​து​வ​தி​லும் முற்​போக்​கான சமூக வளர்ச்​சியை நோக்கி நடை​போடு​வ​தி​லும் வழக்​கறிஞர்​களின் பங்கு மிக முக்​கிய​மானது. சமூக நீதி, தனி மனித உரிமை​களை பாது​காப்​ப​தில் வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களும் முதன்மை அமைப்​பாக
விளங்கி வரு​கின்​றன. ஜனநாயகத்தை செதுக்​கு​வ​தி​லும் வழக்​கறிஞர்​கள் மற்​றும் நீதி​யரசர்​களின்பங்​களிப்பு பாராட்​டத்​தக்​கது.

இந்​தி​யா​வில் வெவ்​வேறு மதம், இனம் மற்​றும் பண்​பாட்டு நடை​முறை​கள் இருந்​தா​லும், நமது அரசமைப்​புச் சட்​டம், அதன் மாறு​பட்ட அணுகு​முறை காரண​மாக உயிர்ப்​புடன் இருக்​கிறது. அரசமைப்​புச் சட்​டத்​தின் மீதான எந்​தவொரு தாக்​குதலுக்​கும் எதி​ராக உறு​தி​யான தூண்​களாக நிற்​கும் சுதந்​திர​மான நீதித்​துறை, சிறந்த நீதிப​தி​கள், வழக்​கறிஞர்​களு​டைய பங்​களிப்பே இந்த உயிர்ப்​புக்கு காரணம். ஆனால் அண்​மைக் கால​மாக அரசமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​பு​களில் ஒன்​றான கூட்​டாட்​சித் தத்​து​வம் பாதிக்​கப்​படும் நிலை உள்​ளது. நிதி, கல்வி போன்ற பல விச​யங்​களில் மாநில அரசுகளின் சுய​சார்​புத் தன்மை உறுதி செய்​யப்பட வேண்​டும். அரசமைப்​புச் சட்​டத்​தின் ஆளு​மையை உறுதி செய்​வ​தில், மாநிலங்​களு​டைய உரிமை​களைப் பாது​காப்​ப​தில் நீதித்​துறை முக்​கிய பங்கு வகிக்​கிறது.

அரசமைப்​புச் சட்​டம் என்​பது வழக்​கறிஞர்​களின் கையில் இருக்​கும் ஒரு ஆவணம்​தானே எனக் கருதக்​கூ​டாது. அது நமது வாழ்க்​கைப் பயணத்​தில், நமது வாழ்​வின் தரத்​தையே மேல்​நிலைக்கு கொண்டு செல்​லும் ஒரு வாக​னம். அது எப்​போதும் இந்த மண்​ணின் ஆன்​மா​வாக விளங்​கு​கிறது என்ற அம்​பேத்​கரின் கூற்றை உணர்ந்து அது​போல வழக்​கறிஞர்​கள் செயல்பட வேண்​டும். இந்த அரசு பொறுப்​பேற்ற நாள் முதல் நீதித் துறை​யின் உட்கட்​டமைப்​புக்​கும், வழக்​கறிஞர்​களின் நலனுக்​கும், சட்​டக்​கல்விக்​கும் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது. உச்ச நீதி​மன்​றத்​தின் கிளையை சென்​னை​யில் அமைத்​தால், தென்​மாநில மக்​களுக்​கும், வழக்​கறிஞர்​களுக்​கும் மிகுந்த பயனுடைய​தாக இருக்​கும். இவ்​வாறு பேசி​னார்.

விழா​வில் உச்ச நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர்​கள் கே.ப​ராசரனுக்கு அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாழ்​நாள் சாதனை​யாளர் விருது வழங்​கி​னார். அதே​போல் கே.கே.வேணுகோ​பாலுக்கு அவரது சார்​பில் மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண் மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஏ.ஆர்​.எல்​.சுந்​தரேசனிட​மிருந்து அந்த விருதை பெற்​றுக் கொண்​டார்.

விழா​வில் அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, சேகர்​பாபு, எம்​.பி.க்​கள் பி.​வில்​சன், என்​.ஆர்​.இளங்​கோ, ஆர்​.கிரி​ராஜன், மாநிலஅரசின் தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் அசன் முகமது ஜின்னா பங்​கேற்​றனர். பார்​ அசோசி​யேஷன்​ செய​லா​ளர்​ திரு​வேங்​கடம்​ நன்​றி கூறி​னார்​.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article