ARTICLE AD BOX
மது விற்பனையை அதிகரிக்க யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது - வானதி குற்றச்சாட்டு
சென்னை: படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறிவிட்டு, தற்போது மது விற்பனையை எப்படி அதிகரிக்கலாம் என்று யோசித்து யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்கும் அனுமதியை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என கூறிவிட்டு, 1000 புதிய பார்களுக்கு உரிமம் வழங்குவதா?பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால் மது, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவோம் என கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நேர் எதிராக மது விற்பனையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
படிப்படியாக மதுக்கடைகளை மூடும் வாக்குறுதி என்ன ஆயிற்று என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களும் கேள்வி கேட்க தொடங்கியதால், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை திமுக அரசு மூடியது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகள் மூடியிருக்கும் நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதை திமுக அரசும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.
இப்படி தமிழ்நாட்டில் எங்கும் மது நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில், அதிகம் மது விற்பனையாகும் இடங்களில், FL2 எனப்படும் சுமார் 1,000 தனியார் பார்களை திறக்க திமுக அரது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களுக்கு டாஸ்மாக்தான் மதுபானங்களை விநியோகம் செய்கிறது. டாஸ்மாக் செயல்படும் நேரத்தைவிட FL2 பார்கள் செயல்பட கூடுதலாக இரண்டு மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியுரிமை பெற்ற கிளப்புகளின் உறுப்பினர்கள் மது அருந்த மட்டுமே FL2 உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், 1000 பார்களுக்கு FL2 உரிமம் வழங்குவதால், கிளப் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, யார் வேண்டுமானாலும் இந்த பார்களில் மதுபானங்களை வாங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகி விட்டது. இதற்கு டாஸ்மாக் மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களே காரணம். பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டுமானால், மது, போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்.
ஆனால், மது விற்பனை எப்படி அதிகரிக்கலாம் என யோசித்து, யோசித்து திமுக அரசு செயல்படுகிறது. எனவே, 1000 பார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஆண்டுக்கு 1,000 கடைகளை குறைத்து ஐந்கு ஆண்டுகளில் முழு மதுவிலக்கை கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- ரமலான் வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது.. அப்படியெனில் 100 முறை கூட சொல்வேன் - உதயநிதி
- பொன்முடி vs செஞ்சி மஸ்தான்.. விழுப்புரத்தில் பொது நிகழ்ச்சியில் வெடித்த மோதல்.. ஆவேசமான தொண்டர்!
- பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக- அமைச்சர் எஸ்.ரகுபதி சரமாரி அட்டாக்
- “தமிழ்நாட்டுக்கு ஒரு தீங்கு வந்தால் வேல் எனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறுவோம்”.. ஸ்டாலின் எச்சரிக்கை!
- “இந்தி வெறியர்கள்தான் உண்மையான தேசதுரோகிகள்”.. ஆக்ரோஷ முகம் காட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
- உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்கு பதிவு செய்ய தடை! ‘சனாதன தர்மம்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி
- வளையலை உருவினாரா திமுக நிர்வாகி? உண்மையில் என்ன நடந்தது.. குன்னூர் கவுன்சிலர் விளக்கம்
- கேள்விக்குறியாகும் சென்னையின் சுற்றுச்சூழல்.. எரிவுலை திட்டத்தை கைவிட வேண்டும் - வானதி சீனிவாசன்
- உறுதிமொழி ஏற்க கையை நீட்டிய உடன்பிறப்பு.. வளையலை கழற்றி விளையாடிய திமுக கவுன்சிலர்? அண்ணாமலை அட்டாக்
- பொன்முடிக்கு புதிய சிக்கல்.. மார்ச் 19ல் நேரில் ஆஜராக சென்னை சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- “ஓட்டுக்காகத்தான் தமிழ் பற்றி பேசுறீங்க.. உள்ளே இந்தி ஆதிக்க வெறி”.. முதல்வர் ஸ்டாலின் தாக்கு!
- தங்க காசு.. "தலை"களின் கட்சி தாவல்.. சலசலப்பு நடுவில் இது வேறயா? விஜய் பற்றி பேச திமுகவில் தடை? ஓஹோ