மக்கள் அச்சம்..! இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக்…!

6 days ago
ARTICLE AD BOX

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம் உள்பட 22 சங்க போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தனர். அதில், இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் ஸ்டிரைக் நடத்துவோம் என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தனர். இதனால் இன்று பேருந்துகள் இயங்குமா என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர்.

தமிழக போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் பிப்ரவரி 20-ம் முதல் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அண்ணா தொழிற்சங்கப் பேரவை உட்பட 22 சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் பணீந்திர ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் கூறியதாவது; ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு தொடங்க வேண்டும். இல்லையெனில், வேலை நிறுத்த நோட்டிஷ் வழங்குவோம். அடுத்த 15 நாட்களில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரையும் இணைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாத சூழ்நிலை உருவாகும்.

சென்னையில் தனியார் மினி பேருந்துகளை அனுமதிக்க கூடாது. மினி பேருந்துகளை அரசே இயக்க வேண்டும். தனியார் தரப்பில் மினி பேருந்துகளை இயக்கினால் லாபம் வரும் நேரங்களில் மட்டும்தான் பேருந்தை ஓட்டுவர்கள். அதிகாலை வேளையில் குறைவான பயணிகளே வருவர் என்பதால் தனியார் உரிமையாளர்கள் ஆம்னி பேருந்துகளை அதிகாலையில் இயக்க மாட்டர்கள். இதனால், பயணிகள் பாதிக்கப்படுவர் என கூறினார்.

The post மக்கள் அச்சம்..! இன்று முதல் எப்போது வேண்டுமானாலும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஸ்டிரைக்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article