மகளிர் பிரீமியர் லீக்: முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர்-பிரண்ட்

21 hours ago
ARTICLE AD BOX

image courtesy:twitter/@wplt20

மும்பை,

3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்களும், நாட் ஸ்கைவர்-பிரண்ட் 30 ரன்களும் அடித்தனர். டெல்லி அணி தரப்பில் மரிஜானே காப், ஜெஸ் ஜோனஸ்சென், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 8 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டெல்லி தரப்பில் மரிசான்னே காப் 40 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 30 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகி விருதை ஹர்மன்ப்ரீத் கவுரும், தொடர் நாயகி விருதை ஸ்கைவர் பிரண்டும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர்-பிரண்ட் 4 ரன்கள் அடித்திருந்தபோது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.

Read Entire Article