ARTICLE AD BOX
பெருமாளுக்குரிய வியாழக்கிழமையில்! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க எத்தனை மணி நேரமானது?
திருப்பதி: திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (பிப். 20-ஆம் தேதி) 8 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகளில் 30 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் பிப்ரவரி 20-ஆம் தேதியான நேற்று மொத்தம் 59,776 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 22,386 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 4.24 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க 8 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் அறைகளில் 30 அறைகளிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.
- 10 ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் வசித்தால் பட்டா.. முதல்வரின் மேஜர் முடிவு.. அமுதா ஐஏஎஸ் தகவல்
- 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொட்டி கொடுக்கும் சனி பகவான்.. சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்
- 2025 சனிப்பெயர்ச்சி எப்போது?.. ராஜயோகம் பெறும் ராசியினர் யார் தெரியுமா?.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
- எழுத்து தேர்வு கிடையாது.. ஸ்டேட் வங்கியில் 1,194 காலியிடம்.. சென்னை சர்க்கிளிலும் பணி நியமனம்
- புதின் வைத்த செக்.. திணறும் டிரம்ப்! இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!
- "ரா" நடிகைக்காக கட்டிப்புரண்ட 2 நடிகர்கள்.. அம்பிகா எங்கே இங்கே? அதைவிடுங்க, மாஸ் சிரஞ்சீவி: பிரபலம்
- கோவையில் நிலம், வீடு வைத்துள்ளவர்களுக்கு வருகிறது மேஜர் திட்டம்.. சொத்து வரி கார்டு என்றால் என்ன?
- ரஷ்யாவுடன் சமாதானமாக போகும் அமெரிக்கா.. நெருங்கிய புடின் - டிரம்ப்! தங்கம் விலைக்கு வரப்போகும் ஆப்பு
- சைந்தவியை பிரிய காரணம் “அந்த” நடிகையா? முதல் முறை ஓபனாக விளக்கம் கொடுத்த ஜிவி பிரகாஷ்
- "செல்ஃபிஷ்" ஆட்டம்னா இதுதான்.. சொந்த மண்ணிலேயே சொதப்பிய பாபர் அசாம்.. 13வது முறையாக நடந்த சம்பவம்!
- சங்கீதாவுடன் கிசுகிசு.. மூணாறில் குடையை மடக்கி.. குமுதம் ஆபீசை நொறுக்கி.. விஜய்க்காக இப்படி நடந்ததா?
- அமெரிக்க இந்தியர்களுக்கு மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ளவர்களின் வேலைகளுக்கும்.. ஆப்பு வைத்த டிரம்ப்