ARTICLE AD BOX
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் ஜாமர் கருவி! திக்குமுக்காடும் குடியிருப்புவாசிகள்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறை சாலையில் ஜாமர் கருவிகள் வைக்கப்பட்டுள்ளதால் அந்த சிறையை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு இணையதளமும், போன் நெட்வொர்க்கும் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை எழுவதாக புகார் தெரிவிக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தில் பரப்பன அக்ரஹார சிறைச் சாலை உள்ளது. இங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா உள்ளிட்டோர் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

பொதுவாக சிறைச்சாலைகளில் கைதிகளிடம் போன் பயன்பாட்டையும் போதை பொருள் புழக்கத்தையும் தடுக்க ஒவ்வொரு முறையும் அவர்களது அறைகளும் உடைமைகளும் சோதனைக்குள்படுத்தப்படும்.
ஆயினும் ஏதாவது ஒரு வகையில் சிறைச்சாலைக்குள் செல்போன்கள் கைதிகளுக்கு கிடைத்துவிடுகின்றன. இதை வைத்தே சிறையிலிருந்தபடியே கைதிகள் சதி திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் போன் பயன்பாடு அதிகரிப்பதை அறிந்த அதிகாரிகள் அங்கு போன்கள் இயங்காத வண்ணம் ஜாமர் கருவிகளை வைத்தனர்.
சிறைச்சாலையில் ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களிலும் ஜாமர் கருவிகளை அவர்கள் வைத்துள்ளனர். இதனால் கைதிகளிடம் போன் இருந்தாலும் அவர்களால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
கைதிகளுக்காக ஜாமர் கருவிகளை பரப்பன அக்ரஹார சிறை வளாகம் வைத்ததால் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறதாம். சிறையில் வைத்துள்ள பல்வேறு ஜாமர் டவர்களால் தங்கள் வீடுகளில் செல்போன் சிக்னலும் இன்டர்நெட் சிக்னலும் கிடைக்காத நிலை இருப்பதாக புகார் கூறுகிறார்கள்.
இதுகுறித்து பரப்பன அக்ரஹார சிறை அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருவோர் கூறுகையில், இந்த குடியிருப்புகளில் மாணவர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
சிறைச்சாலையில் ஜாமர் கருவி வைக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு போன் பேசுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்தும் போது ஓடிபி வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. அவசரத்திற்கு ஒரு போன் செய்ய முடியாத நிலை இருக்கிறது.
ரவுட்டர் மூலம் வீடுகளுக்கு போன் கால் செய்து வருகிறோம். சிறையில் உள்ள ஜாமர் கருவிகளை நீக்குமாறு சிறைத் துறை டிஜிபிக்கு ஒரு மனு அளிக்க போகிறோம். அடுத்த சில நாட்களில் ஒரு போராட்டத்தையும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
இது போல் மோசமான செல்போன் நெட்வொர்க்கால் ஆன்லைன் வகுப்புகளில் டியூஷன் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸை அழைத்த போது நெட்வொர்க் பிரச்சினையால் போன் செய்ய முடியாமல் அவர் இறந்துவிட்டார்.
திகார் சிறையில் கூட 400 ஏக்கருக்கு ஒரு ஜாமர் கருவியைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால் பெங்களூர் மத்திய சிறைக்கு மட்டும் எதற்காக பல ஜாமர்கள் என குடியிருப்புவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- சீனாவிடமிருந்து வந்த நல்ல செய்தி.. இனி தங்கம் விலை "இப்படி" தான்! ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்
- நிலம், வீடு வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி.. கிரைய பத்திரம், பட்டா வேணுமா? இந்த தேதியை நோட் பண்ணுங்க
- திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம்
- சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
- அப்பா ஆகப் போகிறார் பிக்பாஸ் ஷாரிக்.. குழந்தை குறித்து உருக்கமாக வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து
- முட்டுக்கட்டையா போடுறீங்க? அமெரிக்காவை கழற்றிவிடும் இந்தியா? ரஷ்யாவுடன் சேர்ந்து செய்யும் சம்பவம்
- ஏடிஎம்மில் பணம் எடுக்க போன கோவை பெண்.. பான் கார்டில் பல கோடி... நினைத்து பார்க்க முடியாத ட்விஸ்ட்
- மாத்திரை அட்டையில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்குமே! அது ஏன் தெரியுமா? XRx என்றால் என்ன?
- இந்தி எதிர்ப்பா? கருணாநிதி எதிர்த்தார்..1991 திமுக ஆட்சியை டிஸ்மிஸ் பண்ணிட்டோம்! எச்சரித்த சு.சுவாமி
- சிறகடிக்க ஆசை: அண்ணாமலையிடம் வீடியோ காலில் சிக்கிய ரோகிணி.. உளறிய க்ரிஷ்.. முத்துக்கு தெரிந்த உண்மை
- மனைவி பெயரில் 25 சொத்துக்கள்.. சொகுசு கார்.. நீதிபதிக்கு கட்டாய ஓய்வை உறுதி செய்த சென்னை ஐகோர்ட்
- அதிரடியாக பெயரை மாற்றிய நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம்.. அதுவும் இப்படி ஒரு பெயரா?