ARTICLE AD BOX
பெங்களூரில் கால் பதித்த கூகுள்! நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அனந்தா! சிறப்புகள் என்ன?
பெங்களூர்: பெங்களூரில் கூகுள் நிறுவனம் மிகப் பெரிய அலுவலகத்தை திறந்துள்ளது. இதற்கு அனந்தா (ஆனந்தா) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 5000 பேர் பணியாற்றும் அளவுக்கு இட வசதி உள்ளது.
இந்த புதிய வளாகத்தை பார்க்கும் போது கூகுளின் உலக அளவிலான செயல்பாடுகளில் வளர்ந்து வரும் இந்தியா பங்கை பிரதிபலிக்கிறது.

பெங்களூரில் மகாதேவாபுரம் எனும் இடத்தில்தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நீண்ட காலம் கால் ஊன்றுவதற்கான அனைத்து வசதிகளும் இந்த நிறுவனத்தில் உள்ளன.
பெங்களூர், குருகிராம், மும்பை, புனே உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கூகுளுக்கு 10 ஆயிரம் ஊழியர்கள் உள்ளார்கள். டிஜிட்டல் சேவைகளுக்கும் இணையதள பயன்பாட்டை விரிவுபடுத்தவும் கூகுள் நிறுவனம் அதிகபடியான முதலீட்டை செய்கிறது.
எனவே கூகுள் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. மகாதேவபுரத்தில் 1.6 மில்லியன் சதுர அடியில் 5 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் வகையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
கூகுளின் பிற சேவைகளான ஆன்ட்ராய்டு, மேப்ஸ், டீப் மைன்ட், கிளௌட் உள்ளிட்டவையும் இந்த நிறுவனத்தில் பணியாற்றலாம். இந்த கட்டடத்திற்கு ஆனந்தா என பெயரிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் எல்லையற்ற என சமஸ்கிருதத்தில் பொருளாகும்.
நவீன கண்ணாடிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஜாக்கிங் செய்யவும் தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களும் எளிதாக நிறுவனத்தில் தனித்து சென்று வரும் வகையில் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பயன்படுத்தப்பட்ட நீரை 100 சதவீதம் மறுசுழற்சி செய்யும் வசதியும் உள்ளது. சூரிய மின்னாற்றல் பயன்படுத்தப்படுகிறது.
- பெங்களூரில் பூத்த கள்ளக்காதல்.. கிராம பஞ்சாயத்து தலைவிக்கே இந்த நிலைமையா? ஆசை அடங்காத கணவன்! கொடுமை
- பெங்களூரில் குடிநீரை பயன்படுத்த கட்டுப்பாடு.. மீறினால் ரூ.5,000 அபராதம்.. மக்களே கவனம்
- கடலை மிட்டாய் தின்றால் ஆபத்து.. பள்ளிகளுக்கான சப்ளையை நிறுத்தும் கர்நாடகா அரசு.. காரணம் இதுதான்
- 100 சதுர அடி கிடைச்சாலும் விடாதீங்க! இனி பஞ்சப்பூருக்கு தான் டிமாண்ட்! ஒட்டுமொத்த கலரும் மாறிடுச்சு!
- அந்தப்புரம் அம்பலம்.. நடிகை ராதாவுக்காக மோதிய 2 ஹீரோ.. பல்லாயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரி? நிஜமா
- மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பம்.. மகன், மருமகளுக்கு செம வரவேற்பு.. நெகிழ்ச்சியான பதிவு
- விஜய் வித்யாஸ்ரம்.. நடிகர் விஜய் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளி பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அண்ணாமலை
- உதயம் தியேட்டர் வாசலில் படுத்த பிரபல நடிகை அஞ்சலி.. சென்னை ஜவுளிக்கடையில் சேல்ஸ் கேர்ள்? ஆச்சரியம்
- நான் செய்த தப்பு வினையா போச்சு..! அப்பாவை பிணமா தான் பார்த்தேன்.. கண்கலங்கிய லாஸ்லியா
- டிரம்ப் எச்சரித்து 1 வாரம் கூட ஆகவில்லையே.. ஓடோடி வந்து வரியை குறைக்கும் இந்தியா.. வெள்ளைக்கொடி?
- சென்னை தி நகரில் 3 மாடிக்கு அனுமதி வாங்கி 10 மாடி கட்டிய பிரபல நிறுவனம்.. இடிக்க ஹைகோர்ட் உத்தரவு
- பிரம்ம முகூர்த்த நேரம் ஸ்பெஷல் இதுதான்.. குளிச்சிட்டுதான் பூஜை செய்யணுமா? குளிக்காமல் விளக்கேற்றலாமா