ARTICLE AD BOX
பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.. இருவரும் என்ன பேசினார்களாம்?
டெல்லி: மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ரைசினா மாநாடு ஆண்டுதோறும் டெல்லியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் உலகளாவிய அரசியல் - பொருளாதாரம் குறித்து விவாதித்து, சர்வதேச அளவில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள் மட்டுமல்லாது, தொழில் அதிபர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு ரைசினா மாநாடு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்பதற்காக, மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்த வருகையின் போது மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற அலுவல்களையும் பில் கேட்ஸ் பாா்வையிட்டாா். தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எப்போதுமே பில்கேட்ஸை சந்தித்து பேசுவது சிறப்பானதாக இருக்கும். இன்றைய சந்திப்பின் போது, எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக, தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம், புதுமை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சி குறித்து சிறப்பான விவாதம் நடத்தப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சியில் சுகாதாரம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற துறைகளில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுமையினால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகளவில் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க சுவாரஸ்யமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
- மோடியை சந்தித்த இளையராஜா.. இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.. இசைஞானியை புகழ்ந்த பிரதமர்
- "வாழ்க டிரம்ப்.." தங்கம் விலை அடுத்து “இப்படி” தான் இருக்கும்.! அடித்து சொன்ன ஆனந்த் சீனிவாசன்
- 8-வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி.. நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
- இனி இவங்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. சட்டசபையில் அமைச்சர் தந்த சர்ப்ரைஸ்.. அப்படிபோடு
- டிரம்ப் முடிவால்.. இந்தியாவில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்? TCS, Infosys முக்கிய முடிவு?
- உச்சத்திற்கு போன அபராதம்.. நாடு முழுக்க வருகிறது புதிய டிராபிக் விதிகள்.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்
- 1000 கி.மீ வேகத்தில் செல்லும்! ஹைப்பர்லூப் டியூப் வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
- நீயா நானா இனிமேல் வராதா? கைமாறிய விஜய் டிவி.. அந்த சேனலும் "அவங்க" கையில் போயிருச்சு: பிரபலம் பளிச்
- நீயா நானாவுக்கு யாரும் “இப்படி” போய்டாதீங்க! பேசக்கூட முடியாது! வருத்தத்தில் சமையல் யூடியூபர் ஜெனி
- ஷேக் ஹசீனாவை பொதுவெளியில் தூக்கிலிட திட்டம்.. வங்கதேச மாணவர்கள் போட்ட பெரிய சதி - உளவுத்துறை ஷாக்
- ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு.. 7000 சதுர அடியில் ஹைலைட்டே இதுதான்.. சென்னை போயஸ் கார்டனில் அசத்தல்
- ரூ.1500+ரூ.1000..இனிமே மாதம் ‘இவங்களுக்கும்’ மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன அசத்தலான அறிவிப்பு