ARTICLE AD BOX
Published : 23 Feb 2025 03:38 PM
Last Updated : 23 Feb 2025 03:38 PM
பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

திருநெல்வேலி: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இந்தி எழுத்துகளை திமுகவினர் அழிக்கப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் திருநெல்வேலி மாநகர போலீஸார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்கு கொடிகளுடன் சென்ற திமுகவினர் சிலர், ரயில் நிலைய நடைமேடையில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து, தமிழ் வாழ்க என்று எழுதினர். அப்போது, மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும், தமிழ் வாழ்க என்றும் முழக்கமிட்டனர்.
காவல்துறையினர் ஓரிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அறிவித்த இடத்துக்கு மாற்றாக திடீரென பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாளையங்கோட்டை ரயில் நிலையத்துக்குச் சென்று, இந்தி எழுத்துகளை அழித்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்ள ‘உழவர் கைபேசி செயலி’
- ''ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்'': ஸ்டாலின் மீண்டும் உறுதி
- ''அரசின் அவலங்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது'': டிடிவி தினகரன்
- வீட்டை விட்டு ஓடிப்போன விஜய்! | ப்ரியமுடன் விஜய் - 13