ARTICLE AD BOX
400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை: மருத்துவ கவுன்சில் நிரந்தர பதிவு இல்லை எனக் கூறி, அரசு மருத்துவர்கள் பணிக்கான இறுதிப் பட்டியலில் 400 மருத்துவர்களின் பெயரை நீக்கியதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து, 2,642 மருத்துவர்களின் தேர்ச்சி பட்டியலை மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டது.

இந்த பட்டியலில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில், 2024 ஜூலை 15 ஆம் தேதிக்கு முன் பதிவு செய்யவில்லை எனக் கூறி, 400 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதை எதிர்த்து மருத்துவர் சாய் கணேஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுக்களில், 2024 ஜூலை 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பித்தும், பதிவு செய்யப்படாத நிலையில், தற்காலிக பதிவுச் சான்றிதழை வைத்து அரசு உதவி மருத்துவர் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவ பல்கலைக்கழகம், சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்ததால், நிரந்தரப் பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்பதால், தங்களுக்கும் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும், இறுதிப் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணை வந்தபோது,
நீதிபதி, பணி நியமன உத்தரவுகள் இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்தவர் தேர்வு வாரியம் சார்பில் அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகினார்.
குறிப்பிட்ட கட் ஆப் தேதிக்குள் மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள் என்றும் உரிய விதிகளுக்கு உட்பட்டு தான் பணி நியமன நடைபெற்றுள்ளதாகவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு வழக்கை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
- அரசு மருத்துவர்கள் பணி நியமனம்.. இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
- சிக்கிய சீமான்! நடிகை விஜயலட்சுமியை சீரழித்த வழக்கு-விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்? அடுத்து கைது?
- தற்காலிக பணியாளர்களை ஒட்டுமொத்தமாக தூக்குங்க! தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்!
- மக்களுக்கு பாதிப்பு..தேவையற்ற செலவு! போராட்டமெல்லாம் நடத்த கூடாது! அரசு ஊழியர்களுக்கு கோர்ட் ஆர்டர்!
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி.. குட்நியூஸ்! சிக்கலுக்கு தீர்வு கண்டது நீதிமன்றம்!
- “கோயில் நகரமான மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது".. ஐகோர்ட் கிளை நீதிபதி வேதனை!
- கள்ளக்குறிச்சி வழக்கு.. சிபிஐ முக்கியமான வாதம்.. கண்ணுக்குட்டிக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
- நாளை ஆர்ப்பாட்டம் நடப்பது உறுதி.. பேச்சுவார்த்தை, ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!
- பக்கத்து வீட்டுக்காரருடன் காதல்.. மணமான பெண்ணை கல்யாண ஆசைகாட்டி பாலியல் உறவு வைக்கலாமா? ஹைகோர்ட் நச்
- ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
- தர்மபுரி பஸ் ஸ்டாண்டு அசிங்கம்.. "சென்னை காசிமேடு லோகு தெரியுமா? அல்லு உட்ரும்" 2 குடிமகள்கள் கைது
- அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. ஒருவர் கூட தமிழர் இல்லை! ஏன் தெரியுமா?
- வச்ச குறி தப்பாது.. மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
- வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைக்க திடீர் கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
- சிறகடிக்க ஆசை: நீ தான் க்ரிஷ் அம்மா! ரோகிணியிடம் மனோஜ் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன விஜயா குடும்பம்