ARTICLE AD BOX
முகத்தை பொலிவாக பராமரிப்பதற்கு அதிக பணம் கொடுத்து கடைகளில் இருந்து ஃபேஸ் க்ரீம், சீரம் மற்றும் டோனர் போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று பலரும் கருதுவார்கள். மேலும், சரும பராமரிப்புக்காக அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கும் என்றும் சிலர் நினைப்பது உண்டு.
ஆனால், அதிக பணம் மற்றும் நேரம் செலவிடாமல் சிம்பிளான சரும பராமரிப்பு முறைகளை நம்மால் பின்பற்ற முடியும். இதற்காக சுமார் 20 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. இதேபோல், வீட்டில் எப்போதும் இருக்கும் பொருட்களைக் கொண்டு நம் முகத்திற்கு தேவையான ஃபேஸ்பேக்கை நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு சூப்பரான ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை இதில் காணலாம். இதனை வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே செய்ய முடியும். இதற்காக கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பசை பதத்திற்கு கலக்குவதற்காக தேவையான அளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பின்னர், முகத்தில் தடவ வேண்டும். இப்படி தடவியதும் சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறி விடும். இந்த ஃபேஸ்பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.
மேலும், ஃபேஸ்பேக்கை வீட்டிலேயே இரசாயனங்கள் கலக்காமல் தயாரிப்பதால் இதில் இருந்து ஒவ்வாமை ஏற்படும் பாதிப்புகளும் கிடையாது. இதற்காக அதிக பணம் செலவளித்து கடைகளில் இருந்து பொருட்கள் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.
நன்றி - Hira Jishi Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.