பாறை உருண்டு விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து

6 hours ago
ARTICLE AD BOX

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழை காரணமாக ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே மலை ரயில் பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் தண்டவாளம் சேதமடைந்தது. இந்நிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 184 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே நிறுத்தப்பட்டு, மேட்டுப்பாளையம் திரும்பி வந்தது.

The post பாறை உருண்டு விழுந்ததால் ஊட்டி மலை ரயில் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article