மட்டன் வாங்கி வந்த கணவர்…. சமைக்க மறுத்த மனைவியை அடித்தே கொன்ற கொடூரம்…. பரபரப்பு சமபவம்…!!

4 hours ago
ARTICLE AD BOX

தெலுங்கானா மாநிலம் மெஹபூபாவை சேர்ந்தவர் கலாவதி. நேற்று கலாவதியின் கணவர் மட்டன் வாங்கி வந்து சமைத்து தருமாறு கூறியுள்ளார். அதற்கு கலாவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கலாவதியின் கணவர் தனது மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து கலாவதியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலாவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கலாவதியின் கணவரை கைது செய்து நடத்தி வருகின்றனர்.

Read Entire Article