ARTICLE AD BOX
பாதாமை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் நன்மைகள்:
காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தரும் .இது நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைத்து சோர்வை குறைக்கிறது. தேன் மற்றும் பாதாம் பருப்புகளின் இந்த கலவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றன. இது செரிமானத்தை எளிதாக்கவும் சிறப்பாகவும் ஆக்குகிறது. தேன் மற்றும் பாதாமில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கும். இது உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை உள்ளளிருந்து வளர்கிறது. பாதாமில் ஒமேகா 3 ஆறு கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் அவை மூளையை கூர்மைபடுத்துகின்றன. தேன் மற்றும் பாதம் பருப்பின் கலவை மனத்திறனை மேம்படுத்தி கவனம் செலுத்த உதவுகிறது. இந்தக் கலவை உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீங்கள் எடை இழக்க விரும்பினால் தேனில் ஊறவைத்த பாதாம் பருப்பை உட்கொள்வதன் மூலம் நன்மை பயக்கும். தேன் மற்றும் பாதாம் பருப்புகளில் அழச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன அவை உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இந்த கலவை பல உடல்நல பிரச்சினைகளிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் இரண்டு டீஸ்பூன் தேனில் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை ஊற வைக்கவும். வெறும் வயிற்றில் இந்த கலவை சாப்பிடுவதால் அற்புதமான பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கும்.