”பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும்..” INDvPAK மோதல் குறித்து இந்திய வீரர் அதிர்ச்சி கருத்து!

3 days ago
ARTICLE AD BOX
Published on: 
22 Feb 2025, 11:42 am

2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் டாமினேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது.

இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பழிதீர்க்கும் ஒரு போட்டியில் நாளை நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொள்ளவிருக்கிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி
2017 சாம்பியன்ஸ் டிராபி

இதுவரையிலான சாம்பியன்ஸ் டிராபி மோதலில் 5 முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளில், பாகிஸ்தான் 3-2 என முன்னிலை வகிக்கிறது. 2004-ல் கங்குலி தலைமையிலும், 2009-ல் தோனி தலைமையிலும், 2017-ல் கோலி தலைமையிலும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய அணி.

இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் மிகப்பெரிய போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும்..

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன், “நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டும், ஏனென்றால் அதுதான் தொடரை மேலும் சுவாரசியமாக மாற்றும். பாகிஸ்தானை வெல்ல விடவில்லை என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? பாகிஸ்தான் வென்றால்தான் அதுஒரு போட்டியாக மாறும். இரு அணிகளுக்கும் சமமான சண்டையாக இருக்க வேண்டும்” என்று ANI உடன் பேசியுள்ளார்.

ind vs pak
ind vs pak

மேலும் இந்தியா சிறந்த லெவனை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், “இந்தியாவிடம் நிறைய நல்ல பேட்டர்கள் உள்ளனர். சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி தொடங்கி அக்சர் படேல், ஜடேஜா என 8வது வீரர் வரை பேட்டிங் செய்கிறார்கள். ரோகித் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார், துபாய் மைதானத்திற்கு தேவையான சிறந்த லெவனை இந்தியா கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Read Entire Article