ARTICLE AD BOX
சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை போடுரெட்டியாபட்டியில் உள்ளது. இங்கு 16 அறைகள் உள்ளன. 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பட்டாசு உற்பத்தி பணிகள் நடைபெற்றது.
அப்போது சிட்டுபுட்டு வகை வெடிகள் தயாரிக்கும் அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை தரைமட்டமானது. அங்கு வேலை பார்த்த திருத்தங்கல், திருவள்ளுவர் காலனியை சேர்ந்த சுரேஷ்(42) உடல் கருகி உயிரிழந்தார். பால்பாண்டி(39) என்பவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
The post பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளி பலி appeared first on Dinakaran.