நீண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரிப்பு

9 hours ago
ARTICLE AD BOX

Published : 06 Mar 2025 01:26 AM
Last Updated : 06 Mar 2025 01:26 AM

நீண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரிப்பு

<?php // } ?>

சாதகமாற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தையில் நீடித்து வந்த சரிவுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரித்து 73,730 ஆகவும், நிப்டி 254 புள்ளிகள் உயர்ந்து 22,337-ஆகவும் நிலைத்தன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக கொள்கை சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலும் ஆசிய சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

அதன் காரணமாக, நிப்டி 50-யில் மஹிந்திரா, பவர் கிரிட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, அதானி எண்டர் பிரைசஸ் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. நிப்டி ஐடி 1.6%, ஆட்டோ 1.1%, வங்கி குறியீட்டெண் 0.3% ஏற்றம் பெற்றன.

1996-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து நிப்டி 50 மீக நீண்ட சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2024 செப்டம்பரில் உச்சபட்சமாக 26,277 புள்ளிகளில் இருந்த நிப்டி குறியீடு தற்போது 16 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 2008-09 உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியுடன் ஒப்பிடும்போது தற்போது 6-வது முறையாகவும், கோவிட் காலமான 2020 மார்ச்சுடன் ஒப்பிடும்போது 2-வது முறையாகவும் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.

நடப்பாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை பங்குகளில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article