நாகர்ஜூனா அமலா கூட இருந்தாலும் தில்லா போன் பண்ணி பேசும் ஒரே நடிகை இவங்க தான்!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை அமலாவிற்கு தெரிந்தே அவருடைய கணவர் நாகர்ஜூனாவிற்கு ஒரு ஹீரோயின் போன் செய்கிறாராம். அந்த நடிகை யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Nagarjuna Akkineni

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் நடிகர் நாகர்ஜூனாவிற்கு பல ஹீரோயின்களுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது, அதில் ஒரு ஹீரோயினுடன் மட்டும் இன்னும் அவர் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஹீரோயின் எப்பொது வேண்டுமானாலும் போன் செய்வாராம். சில நேரங்களில் இரவில் கூட நாகர்ஜூனாவிற்கு போன் செய்வாராம். அந்த விஷயம் நாகார்ஜூனாவின் மனைவி அமலாவுக்கு கூட தெரியும். அப்படியானால், அந்த நடிகை யார் என்று பார்ப்போம்.

தெலுங்கில் மன்மதனாக ஜொலிக்கிறார்

அக்கினேனி நாகார்ஜூனா தெலுங்கில் மன்மதனாக ஜொலிக்கிறார். மூத்த மகன் நாக சைதன்யாவிற்கு திருமணம் நடந்து கூடிய விரைவில் மூத்த மகன் மூலம் பேரனையோ அல்லது பேத்தியையோ வரவேற்க காத்திருக்கிறார். அப்படியிருந்தும் கூட சினிமாவில் இன்னும் அதே துடிப்புடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னமும் அதே ஃபிட்னஸ், கவர்ச்சியை நாகார்ஜூனா மெயின்டெய்ன் செய்கிறார் என்றால் அதில் துளியும் சந்தேகம் இல்லை.

தண்டேல் வெற்றிக்கு தன்னுடைய மருமகள் தான் காரணம் – புகழ்ந்து பேசிய நாகர்ஜூனா!
 

யார் என்பதை தெரிந்து கொள்வதில் உங்களுக்கும் ஆர்வம் ஏற்படுகிறதா?

நடிகர் நாகார்ஜூனா விஷயத்தில் நிறைய வதந்திகள் வந்துள்ளன. நிறைய ஹீரோயின்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுவது உண்டு. ஒரு காலத்தில் ஃபார்மில் இருந்த ஹீரோயின்களில் இருந்து இப்போது ஸ்டார்களாக ஜொலிக்கும் ஹீரோயின்கள் வரை நிறைய ஹீரோயின்களின் பெயர்கள் நாகார்ஜூனா உடன் தொடர்பில் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவர்களில் ஒரு நடிகை மட்டும் இப்போதும் நாகார்ஜூனாவுடன் அதே தொடர்பை தொடர்ந்து வருகிறாராம். நள்ளிரவில் கூட அந்த ஹீரோயின் போன் செய்கிறார். நள்ளிரவில் நாகார்ஜூனா படுக்கைக்கு போகும் போது, அவரது மனைவி அமலா பக்கத்தில் இருந்தாலும் அவர் தயக்கம் இல்லாமல் கால் செய்கிறாராம். அப்படியானால் அந்த நடிகை யார் என்பதை தெரிந்து கொள்வதில் உங்களுக்கும் ஆர்வம் ஏற்படுகிறதா?
 

நாகார்ஜூனா நள்ளிரவில் படுக்கையில் இருந்தாலும் கால் செய்யும் ஒரே நடிகை

நாகார்ஜூனா நள்ளிரவில் படுக்கையில் இருந்தாலும் விடாமல் கால் செய்யும் ஒரே சினிமா நடிகை என்றால் அது தபு தான். நாகார்ஜூனா, தபு இடையே நல்ல தொடர்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து சிசிந்திரி, ஆவிட மா ஆவிட, நின்னே பெள்ளாடதா படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு வளர்ந்துள்ளது. அதனால் இவர்கள் மீது நிறைய வதந்திகள் வந்துள்ளன. ஆனால் நாகார்ஜூனாவை தபு ரொம்ப விரும்பினாராம், கல்யாணத்துக்கும் தயாராக இருந்தாராம். ஆனால் அமலா கோபப்பட்டதால் பின்வாங்கிவிட்டாராம். ஆனால், நாகர்ஜூனா மீது இருந்த தீராத காதல் காரணமாக அவர் திருமணம் ஆகாமல் சிங்கிளாக இருக்கிறார் என்கிறார்கள்.

மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?
 

ஆனால் எங்கள் மத்தியில் நல்ல நட்பு இருக்கிறது என்று நாகார்ஜூனா சொல்கிறார். அந்த நட்பு எப்படி இருக்கிறது என்றால் அவர் எப்போது ஹைதராபாத்துக்கு வந்தாலும் தன் வீட்டுக்கு வருவார். அதுமட்டுமல்ல, தன் வீட்டுக்கு எதிரிலேயே வீடு கூட வாங்கிவிட்டாராம். தபுக்கு மூட் ஆஃப் ஆனாலும், கவலையானாலும் நள்ளிரவு ஆனாலும் சரி தன் பர்சனல் நம்பருக்கு போன் செய்வார். இன்னும் என் மனைவி அமலா பக்கத்தில் இருந்தாலும் அவர் போன் காலை எடுத்து பேசிடுவேன். தபு விஷயம் அமலாவுக்கு தெரியும் என்று நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.
 

கிங் நாகார்ஜூனா டோலிவுட்டில் டாப் நடிகராக ஜொலிக்கிறார்

டோலிவுட் மன்மதன், கிங் நாகார்ஜூனா டோலிவுட்டில் டாப் நடிகராக ஜொலிக்கிறார். ஒன் மேன் ஹீரோவாக சினிமா செய்து கொண்டிருக்கும் இவர், தனக்கு வரும் ஆஃபர்களை பார்த்து, சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி அவர் மல்டி ஸ்டார் படத்திலும் நடிக்கிறார். முதலில் இருந்தே அவர் இந்த ட்ரெண்டை ஃபாலோ செய்து வருகிறார். இப்போது ரஜினிகாந்த் உடன் 'கூலி' , தனுஷ் உடன் 'குபேரா'ஆகிய  படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் குபேரா வரும் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இன்னும் சிங்கிள் ஹீரோவாக எந்த படத்திலயும் அவர் கமிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜூனாவுக்கு நிறைய ஹீரோயின்களுடன் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது, ஒரே  ஒரு ஹீரோயினுடன் இன்னும் தொடர்பில் இருப்பதாக கூறப்படுவது தான் டோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.

Read Entire Article