நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு: ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை சென்னை ஐகோர்ட் உத்தரவு

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் மாதம் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு தருமாறு உத்தரவிடக்கோரி நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கு: ஏப்ரல் 9ல் இறுதி விசாரணை சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article