தேர்​தலில் வெற்றி பெறுவது பெரும் குற்​றமா? - அன்புமணிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி

1 day ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 06:04 AM
Last Updated : 25 Feb 2025 06:04 AM

தேர்​தலில் வெற்றி பெறுவது பெரும் குற்​றமா? - அன்புமணிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி

<?php // } ?>

சென்னை: ‘சென்னை​யில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரி​யில் போட்​டி​யிடலாம், சென்னை​யில் வசித்த நான் மயிலாடு​துறை​யில் போட்​டி​யிடக் கூடா​தா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடு​துறை காங்​கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கும்​பகோணத்​தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்​டத்​தில் அன்புமணி ராமதாஸ் பேசும்​போது, ‘இந்த தொகு​திக்கு சம்பந்​தமில்லாத சென்னையி​லிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரி​யாமல் வாக்​களித்து அவரை வெற்றி பெறச் செய்​தீர்கள்' என்று பேசி​யதன் மூலம், தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்​கடிக்​கப்​படு​வ​தால் உங்களுக்கு ஏற்பட்​டுள்ள விரக்தி, வயிற்றெரிச்சலை உணர முடிகிறது.

பெண் என்றும் பாராமல் பொது​ வெளி​யில் நக்கல், நையாண்​டித்​தனமாக பேசி​யதன் மூலம் நீங்கள் யார், பெண்களை எந்த அளவுக்கு நீங்கள் மதிக்​கிறீர்கள் என்பதை அனைவரும் அறிவார்​கள். இதுதான் உங்களது பண்பும்​ கூட. சென்னை​யில் பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி சவுமியா அன்புமணி மற்றும் நீங்கள் தருமபுரி​யில் போட்​டி​யிடலாம்.

சென்னை​யில் வசித்து இன்று மயிலாடு​துறை​யில் நிரந்​தர​மாகக் குடியேறிய நான், மயிலாடு​துறை​யில் தேர்​தலில் நின்று வெற்றி பெற்​றால் பெரும் குற்​றமா? உங்கள் வீட்டுப் பெண்​களுக்கு ஒரு நீதி, மற்ற பெண்​களுக்கு ஒரு நீதியா? இதுதான் நீங்கள் கற்றுக்​கொண்ட, கற்றுக் கொடுக்​கும் சமூக நீதியா? சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் சுதா என்றால் அனைத்து வழக்​கறிஞர்​களுக்​கும், நீதிப​தி​களுக்​கும் நன்கு தெரி​யும்.

தமிழக காங்​கிரஸ் கட்சி​யின் செய்தித் தொடர்​பாளராக 10 ஆண்டு​களாக இருந்து ஊடகங்​களில் பேசி வருகிறேன். இத்தகைய என்னை யாரோ ஒருவர், எந்த ஊர் என்று தெரிய​வில்லை என்று பேசி​யிருப்பது ஒரு கட்​சியை வழிநடத்​தும் தலை​மைப் பண்பை நீங்கள் பெற​வில்லை என்​ப​தைத்​தான் ​காட்டு​கிறது. இவ்​வாறு அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article