ARTICLE AD BOX
Published : 25 Feb 2025 05:37 AM
Last Updated : 25 Feb 2025 05:37 AM
துணை முதல்வர் உதயநிதி தலைமையில் மாநில திட்ட குழுவின் ஆய்வு கூட்டம்

சென்னை: மாநில திட்டக் குழுவின் கூட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக் குழுவின் ஆய்வு கூட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
மாநில திட்டக் குழுவால் இதுவரை தயாரிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட அரசின் முன்னோடி திட்டங்களுக்கான மதிப்பீட்டு ஆய்வுகள், சிறப்பு ஆய்வுகள் குறித்தும், தற்போது நடைபெற்று வரும் ஆய்வுகள் குறித்தும், மாநில திட்ட குழுவால் நடைமுறைப்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்தும் துணை முதல்வர் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரின் சிறப்பு திட்டங்களால், தமிழகத்தின் குக்கிராமங்களில் உள்ள சாமானிய மக்கள் முதல் நகரத்தில் வாழும் மக்கள் வரை எந்த அளவில் பயன் பெற்றுள்ளார்கள், இந்த திட்டங்கள் அவர்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றங்கள், மாற்றங்கள் குறித்து திட்டக்குழு மேற்கொண்ட ஆய்வுகளில் கிடைத்த புள்ளி விவரங்களை துணை முதல்வர் விரிவாக கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன், மாநில திட்டக் குழு உறுப்பினர் செயலர் எஸ்.சுதா, முழு நேர உறுப்பினர் இராம.சீனுவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினர் ம.விஜயபாஸ்கர் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை