ARTICLE AD BOX
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளரை கண்டித்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் வேகன்களுக்காக கடந்த பிப்ரவரி.22ம் தேதி முதல் சுமார் 140 லாரிகளில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அதிக ரயில் வேகன்களை வரவழைத்து நெல் மூட்டைகளை ஏற்ற வேண்டும் என லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தினர் .
The post திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.