ARTICLE AD BOX
Published : 24 Feb 2025 10:19 PM
Last Updated : 24 Feb 2025 10:19 PM
திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையின் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் 22 பேர் கைது

திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் 22 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 20-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திருத்தணி ரயில் நிலையத்தில் திரண்டு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் ரயில் நிலையத்தின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் உள்ள ரயில் நிலைய பெயர் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடம் விரைந்தனர். தொடர்ந்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து, கிரண் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- 100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல்
- வெள்ளியங்கிரி மலையில் ஏற்றப்பட்ட தவெக கொடி அகற்றம்!
- “திமுக காண்பது பகல் கனவு; 2026-ல் அதிமுக ஒன்றிணைந்து வெல்லும்!” - ஜெ. பிறந்த நாள் நிகழ்வில் சசிகலா பேச்சு
- ‘கள்ளுக்கு தடை விதித்தது அநீதி!’ - பல்லடம் அருகே கள் மாநாட்டில் கருத்து