ARTICLE AD BOX
தலைக்கேறிய போதை.. மணமகளுக்கு பதில் மாலையை மாற்றி போட்ட மாப்பிள்ளை.. இனி மறக்கவே மாட்டார்
லக்னோ: தலைக்கேறிய போதையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பக்கத்தில் இருந்தவரின் கழுத்தில் மாலையை போட்டதால் இளைஞரின் திருமணம் நின்றது. இந்நேரம் திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்ல வேண்டிய அந்த மணமகன் மீது இப்போது வரதட்சணை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது. அதோடு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இவர்களின் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்கியது. இதையடுத்து மணமகன் ரவீந்திர குமார் மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
பரேலி அருகே குளோடியா போலீஸ் எல்லைக்குட்பட்ட பரிகிடா பகுதிக்கு ஊர்வலம் வந்தது. அங்கு மணப்பெண்ணும் வந்தார். இதையடுத்து திருமணத்துக்கான சடங்குகள் நடதத்தப்பட்டது. இந்த சமயத்தில் மணமகன் ரவீந்திர குமார் மதுபானம் அருந்தி இருந்தார். போதை தலைக்கேறிய நிலையில் அவர் தடுமாறினார். திருமண சடங்கின் ஒருபகுதியாக மணமகன், மணமகளுக்கும், மணமகள், மணமகனுக்கும் மாலை அணிவிக்கும் சம்பிரதாயம் நடந்தது.
அப்போது போதையில் இருந்த மணமகன் ரவீந்திர குமார் தனது மாலையை கழற்றி மணப்பெண்ணின் கழுத்தில் போட வேண்டும். ஆனால் போதையில் இருந்த அவர் மணப்பெண்ணின் கழுத்தில் போடுவதற்கு பதில் அருகே நின்ற நண்பனின் கழுத்தில் போட்டார். இதனால் அங்கு வந்திருந்த அனைவரும் சிரித்தனர். இதனால் கடும் கோபமடைந்த மணப்பெண், மணமகனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தார்.
அதோடு மணப்பெண் அங்கிருந்து வேகமாக சென்றார். ‛‛குடிகார மாப்பிள்ளை வேண்டாம். அவரை நான் திருமணம் செய்ய மாட்டேன்'' என்று கூறி மணப்பெண் வேகமாக வெளியே சென்றார். இதனால் அங்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகன் - மணமகள் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேர்க்கள் சேதப்படுத்தப்பட்டன. உணவுகள் தூக்கி வீசப்பட்டன. நிலைமை மோசமாகவே போலீசார் வந்து தலையிட்டு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு மணமகள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
மேலும் மணமகன் குடும்பத்தினர் சார்பில் கூடுதல் வரதட்சணை கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மணமகன் ரவீந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கொல்கத்தாவ கொள்ளுதாத்தானு படிச்ச நீயெல்லாம்.. இப்போ இங்கிலீஷ் பாட்டை ஸ்டோரில வைக்குற!
- ஹனிமூன் போன தம்பதி.. கணவனின் செயலால் ஆடிப்போய்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்.. இதுக்கு ஒரு முடிவு இல்லையா
- 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு.. குவிந்த பக்தர்கள்
- வீடியோ காலில் வந்த கணவர்.. கும்பமேளாவில் யோசிக்காமல் மனைவி செய்த செயல்.. ஆடிப்போன நெட்டிசன்கள்
- வில்லங்கம் தந்த ஆசை.. ஒரே மேடை, ஒரே நாள், ஒரே நேரத்தில் அக்கா - தங்கைக்கு கல்யாண ஏற்பாடு.. அப்பறம்?
- ஜீ தமிழ் போனதும் மணிமேகலை போட்ட முதல் போஸ்ட்..பிரியங்கா ஸ்டோரியில் பகிர்ந்த செய்தி..குவியும் கமெண்ட்
- தர்மபுரி பஸ் ஸ்டாண்டு அசிங்கம்.. "சென்னை காசிமேடு லோகு தெரியுமா? அல்லு உட்ரும்" 2 குடிமகள்கள் கைது
- அமெரிக்காவில் இருந்து இதுவரை நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில்.. ஒருவர் கூட தமிழர் இல்லை! ஏன் தெரியுமா?
- வச்ச குறி தப்பாது.. மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
- வங்கியில் அடகு வைத்த தங்க நகைகளை மறு அடகு வைக்க திடீர் கட்டுப்பாடு.. பொதுமக்கள் எதிர்ப்பு
- சிறகடிக்க ஆசை: நீ தான் க்ரிஷ் அம்மா! ரோகிணியிடம் மனோஜ் சொன்ன வார்த்தை.. ஆடிப்போன விஜயா குடும்பம்
- இரண்டாவது திருமணத்துக்கு நடிகை ரெடி? இவரா மாப்ளை? சமத்தானவர் அமைந்துவிட்டால் மகிழ்ச்சிதான்: பிரபலம்
- தனுசுக்கு சனியின் ஆட்டம் ஆரம்பம்.. அர்த்தாஷ்டம சனி அள்ளிக் கொடுக்குமா?.. கெடுக்குமா?
- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. சுடச்சுட சீமான் கொடுத்த ரியாக்ஷன்
- இனி ராக்கெட் மாதிரி.. விடாமல் தங்கத்தின் விலை உயரும்.. ரூ.17 ஆயிரம் உயரப்போகிறதா? வார்னிங்!