ARTICLE AD BOX
சென்னை: மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 18,000 மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் பெரும்பாலான மருத்துவமனைகளில் தற்போதும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதுபோன்ற நிலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.