ARTICLE AD BOX
இலைகள்…
அரசு, வேம்பு, கருவை, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே *இலை* என்று பெயர் .
அகத்தி, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவைகளின் இலைகள் இலைகள் எனப்படாமல் *கீரை* ஆகின்றது.
மண்ணிலே படர்ந்து கிளைத்து வளரும் கொடிவகை இலைகளுக்குப் *பூண்டு* என்று பெயராகிறது.
கோரை, அறுகு வகைத் தாவரங்களின் இலைகள் *புல்* என பெயர் பெறுகின்றன.
மலைகளில் உயர்ந்து விளைகின்ற உசிலை போன்ற இலைகளுக்குப் பெயர் *தழை* எனப்படுகிறது.
வரகு, நெல், முதலியவற்றின் அகலமற்ற உயரம்குறைந்த பயிர்களின் நீண்ட நெடிய இலைகள் *தாள்* என வழங்கப்படுகிறது.
தாழை, சப்பாத்தி, கள்ளி, போன்ற வறண்ட நிலத்தாவர இனங்களின் இலைகளுக்குப் பெயர் *மடல்* எனப்படுகிறது.
நாணல், கரும்பு ஆகியவற்றின் இலைகள் *தோகை* என்று தமிழ் கூறுகின்றது.
தென்னை, கமுகு, பனை முதலிய நெடிதாய் வளர்ந்து உயர்ந்த மரங்களின் இலைகள் *ஓலை* என்றே சொல்லப்படுகின்றன.