ARTICLE AD BOX
Published : 15 Mar 2025 03:36 AM
Last Updated : 15 Mar 2025 03:36 AM
தமிழகத்தில் மார்ச் 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் வரும் 17-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக வரும் 17, 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20-ம் தேதி வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில இடங்களில் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும். இன்று வட தமிழத்திலும், வரும் 16, 17-ம் தேதிகளிலும் தமிழகத்திலும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- பூநாரை பறவைகள் சரணாலயமாக மாறும் தனுஷ்கோடி: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
- திருச்செந்தூர், பழனி உள்பட 7 இடங்களில் ரூ.300 கோடியில் சுற்றுலா கட்டமைப்பு வசதிகள்
- விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரூ.9.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
- வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் பட்டா வழங்கப்படும்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு