ARTICLE AD BOX
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடு தொடர்ந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆங்கிலத்தில் துணையுடன் உலகை வலம் வருகின்றனர்.
இன்றைக்கு இந்தியாவின் முன்நோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு நிதி ஒதுக்கீடு
45 பன்நாட்டு மொழிகளில் திருக்கிறள் மொழிபெயர்க்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.133 லட்சம் நிதி ஒதுக்கீடு.
மொழிபெயர்ப்பு நூல்கள்
மொழிபெயர்ப்பு நூல்கலை பதிப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு
நூல்களைப் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி , ஒலைச்சுவடிகளை மின்பதிப்பாக்கம் ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தில்லிஸ பெங்களூருவில் புத்தக கண்காட்சி
பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் நடப்பாண்டு முதல் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.