ARTICLE AD BOX
சென்னை: தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதன் அதிரடியாக கடந்த 11ம் தேதி ஒரு பவுன் ரூ.64,480க்கு விற்பனையானகி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,560க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதையடுத்து, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,075க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,600க்கு விற்பனையானது. தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது நகை வாங்குவோரையும், சாமானிய மக்களையும் கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கு விற்பனையானது. பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
The post தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது: பவுனுக்கு ரூ.64,600க்கு விற்பனை appeared first on Dinakaran.