ARTICLE AD BOX
Published : 20 Feb 2025 05:38 AM
Last Updated : 20 Feb 2025 05:38 AM
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு 136 ஆண்டு கடுங்காவல்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த நபருக்கு 136 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடையாணிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம்.கே.ரெஜி(52). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மே 31-ம் தேதி தன் வீட்டுக்கு அருகிலுள்ள சிறுமி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த பெண், சினிமாவில் நடிப்பதற்காக கோட்டயம் வந்திருந்தார். இந்நிலையில் சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ரெஜி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோட்டயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு எரட்டுப்பெட்டா விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ரெஜிக்கு 136 கடுங்காவல் தண்டனை, ரூ.1,97,500 அபராதத்தை விதித்து நீதிபதி ரோஷன் தாமஸ் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோஸ் மேத்யூ தாயில் ஆஜரானார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- உலகின் மிகப்பெரிய உந்துசக்தி கலவை இயந்திரம்: இஸ்ரோ உருவாக்கி சாதனை
- உ.பி.யின் 75 சிறைகளில் உள்ள 90 ஆயிரம் கைதிகள் திரிவேணி சங்கம நீரில் குளிக்க ஏற்பாடு
- நோன்பு நாட்களில் முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்: தெலங்கானா முதல்வர் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு
- பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி: பிப்.22-ல் நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது