ARTICLE AD BOX
ஆலப்புழா: ஆலப்புழா பைபாஸ் கடற்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால சாலை இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கேரள மாநிலம் ஆலப்புழா கடற்கரை பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அமைப்பு சார்பில் இந்த சாலை பணிகள் நடந்து வந்தன. நேற்று காலை 11 மணியளவில் திடீரென மேம்பால சாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்தை ஆலப்புழா கலெக்டர் அலெக்ஸ் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
The post சிசிடிவி காட்சிகள் வைரல் ஆலப்புழா மேம்பால சாலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.