ARTICLE AD BOX

அமெரிக்காவில் பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மென் என்பவர் வசித்து வருகிறார். இவர் செயற்கை நுண்ணறிவு ஆய்வாளராக உள்ளார். இவர் பாட்காஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் டிரம்ப், எலான் மஸ்க் போன்ற பல உலகப் பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லெக்ஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சி 3 மணி நேரம் நடைபெற்றது.
அப்போது லெக்ஸ், பிரதமர் மோடியிடம் மரணத்தை நினைத்து நீங்கள் என்றாவது பயந்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மோடி, நாம் பிறக்கும் போதே மரணம் நிச்சயமாகிவிட்டது. நிச்சயமாக நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி எதற்கு பயப்பட வேண்டும் என்று கூறினார். அதனால் மரண பயத்தை புறந்தள்ளி வாழ்க்கையை நேசிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.